எண்ணங்களை சின்னங்களாக மாற்றுபவன் நான்.
சிந்தனைகளை சிற்பமாய் செதுக்குபவன் நான்.
ஐம்பூதங்களுக்கும் அன்பானவன் நான்.
விண்ணையும் கடந்தவன் நான்.
அகிலம் ஒளிர உழைத்தவன் நான்.
மாய உலகை படைத்தவன் நான்.
மந்திரமில்லா மனிதன் நான்.
இயந்திரனையும் தந்தவன் நான்.
கார்மேகம் சூழும் காலமறிந்தவன் நான்.
மின்னொளியின் ஆக்கம் நான்.
கருவிகளின் உருவாக்கம் நான்.
தகவலும் நான்..!! தொடர்பும் நான்.!!
அறிவியலும் நான்..! அறிஞனும் நான்.!!
"பொறியாளன்" நான்..
அனைத்து பொறியாளர்களுக்கும் சமர்ப்பணம்.
-பொறியாளன் பிரதாப்
No comments:
Post a Comment