Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

உழவா

உழவா

உலகளாவிய கருத்துக்கள் கேட்ட உங்களுக்கு இந்த உள்ளூரானின் கருத்து கொஞ்சம் பழமை தான் ஆனால் சொல்வது என் கடமை.
காவிரியும் பொய்த்தது, கார்மேகமும் பொய்த்தது.
கழனிகள்தோறும் கருவேல மரம் முளைத்தது.
கருத்தறிக்க முடியாமல் விதைத்த விதைகள் துடித்தது.
உலகுக்கே உணவளிக்கும் உழவன் தன் உயிர் துறக்கும் அவலமும் நேர்ந்தது.
செல்லா காசாக போனது ₹500ம், 1000ம் மட்டுமல்ல...
நாடுதோறும் நட்ட நெற்பயிராயிரமும்.. செங்கரும்பாயிரமும் தான்.
தற்கொலை செய்யும் விவசாயிகளே சற்று பொறுங்கள்.
உங்கள் கோபத்தையும் வேகத்தையும் கருவேல மரத்திடம் காட்டுங்கள்.
உயிரையே துறக்க துனிந்த நீங்கள் கருவேல மரத்தை கருவறுக்க தயங்கலாமா.
உங்கள் ஏமாற்றத்தை உருமாற்றம் செய்யுங்கள்.
விளைவித்த நீங்களே விலையை நிர்னயிங்கள்.
விவசாயிகளே மெருகேறுங்கள். விளைபொருளை மதிப்புகூட்டுங்கள்.
அய்யா சொன்னது போல நீரை பூமியில் தேடாதீர்கள்.
அதை வானிலிருந்து வரவையுங்கள்.
மீண்டும் பிறந்தோம் என எண்ணி, மீண்டும் முயலுங்கள்.
உழவே தலை, உழவனே உயிருள்ள கடவுள்.
-பிரதாப் மோகன்.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]